அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #48

12-8-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சமீப காலங்களில் கொடிய நோய்களினால் பலர் மாண்டு (இறந்து) விடுகின்றனர். இதில் குறிப்பாக குழந்தைகளும் சிசுக்களும் எப்பாவமும் அறியாதவர்களும் மாண்டு விடுகின்றனர்களே இது ஏன்? இவ்விதம் நடந்திட இறைவன் கருணையற்றவனா?

கேள்வி கேட்கின்றவர் வெறும் மாயையின் பிடியினால் இப்படி கேட்கின்றார். பிறப்பு என்றால் இறப்பு உண்டு. பெற்றவர்கள் அவர்கள் செய்த கர்மவினைகளை அனுபவித்துக் கொள்கின்றனர். ஏதோ ஜென்மத்தில் மற்றவரின் குழந்தைகளை அபகரித்தோ பிரித்தோ வேதனையளித்த காரணத்தால் இன்று அக்குழந்தைகளின் பெற்றோர் பட்ட வேதனைகளை அனுபவிக்கின்றனர். யாம் கூறுவது கொடுமையாகவே உங்களுக்குத் தோன்றும் இருப்பினும் உண்மை நிலை இதுவே. எந்த அளவிற்கு இந்த பூமியும் தாங்கும் என்பதை சிறிது சிந்தித்துக் கொள்ளுதல் வேண்டும். மாயைப் பற்றி எமக்கு யாதும் தெரியாது யாம் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் கூறிவிட்டால் உண்மையான நிலையை நீ உணரவில்லை என்பதே பொருளாகின்றது. விதிவிலக்கு இங்கு இல்லை. நீ பார்ப்பது ஆத்மாவை அல்ல வெறும் உடலை என்று வருத்தத்துடன் யாம் கூறுகின்றோம். இருப்பினும் இது துக்கம் தரும் நிலை என யாம் எடுத்துரைப்போம். இதிலிருந்து மீள என்ன வழி என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும். மற்றவை அனைத்து வீண் வாக்குவாதத்தில்தான் செல்லும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.