அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #42

9-12-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மார்கழி மாதத்தில் நல்காரியங்கள் செய்யாதது ஏன்? அதனை ஏன் பீடை மாதம் என்று அழைக்கின்றனர்?

மார்கழி மாதமானது பீடை மாதம் அல்ல அது பீடம் மாதம் என்று கூறுதல் வேண்டும் தெய்வங்கள் குறிப்பாக சக்தியை பீடத்தில் அமர்த்தி வழிபடும் காலம் மார்கழி மாதம் என்பதை உணர்தல் வேண்டும். மார்கழி மாதத்தில் தெய்வ காரியத்தை தவிர வேறு காரியம் செய்யக்கூடாது என பெரியோர்கள் கருதினர். அதற்காக நல்காரியங்கள் செய்யாதீர்கள் மற்ற காரியங்கள் யாதும் செய்யாதீர்கள் தெய்வ வழிபாட்டில் மட்டும் அமருங்கள் என்றால் மனிதன் கேட்க மாட்டான். இத்தகைய நிலையில் பீடம் என்பது சிறிதாக மாறி பீடை மாதமாக மாறி விட்டது இது ஒன்றே இதற்கான விளக்கம் தெய்வ நல்காரியங்கள் தெய்வ காரியங்கள் செய்யும் காலம் என்பதால் மற்ற காரியங்கள் செய்யாதீர் என்பதே இதற்கு விளக்கமாகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகவே இக்காலம் மண்டல காலம் என அழைக்கப்பட்டும் ஐயப்பன் வழிபாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் அக்காலத்தில் தெய்வ காரியங்கள் தெய்வ நல்காரியங்கள் எடுத்துச் செய்வீர்களாக.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.