அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #70

13-10-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தந்திரம், மந்திரம் எந்த முறை பூஜை சிறப்பானது?

பூஜைகள் மூன்று வகை உண்டு. மந்திரம், தந்திரம் இதற்கு மேலானது மானசீக பூஜை. மனதிற்குள் சொல்லும் மந்திரம் சிறந்தது என்றும் அவ்வழியில் பூஜைகளும் மானசீகமாய் செய்வதே சிறந்தது. இரண்டாவது வழி தாந்திரிக பூஜை இது மந்திரமது மனதிற்குள்ளும் முத்திரை வழி அதாவது செய்கையின் வழி உணர்த்தும் பூஜையாம். மூன்றாவது மந்திர உச்சாடனம் இரண்டாவது கற்ப்பது சிறிது கடினம் என்றும் செய்யும் முத்திரைகள் சீரில்லையேல் பலனும் குறையும் இந்நிலையில் ஆரம்ப காலத்தில் மந்திரம் பின்பு தந்திரம் பின்பும் மானசீகம் என்ற விதிமுறையே வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.