அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #8

14-11-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்விதம் வழிபாடு நடத்துவது எவ்விதம் வழிபடுவது என்ன படைப்பது?

முதன்மையில் வழிபடும் முன்னதாக பூரண சரணாகதி அடையவேண்டும். பூரண சரணாகதி இல்லையேல் முழுமையாக பூஜையிலோ ஜெபத்திலோ ஈடுபட இயலாது. இத்தகைய நிலையில் வழிபடும் காலத்தில் முதலில் முழுமையாக சரணாகதி அடையுங்கள். பின்பு ஜெபிக்க, மனதில் எவ்வித சச்சரவுகளும் உண்டாகாது தடைகளும் நேரிடாது. நாம் என்ன உணவு உண்கின்றோமோ அதை தைரியமாக படைத்திடலாம். தகாதது (ஆகாதது) படைத்தால் என்ன ஆகும் என்று சிலர் அஞ்சுவது (பயப்படுவது) உண்டு. இதை மாற்றும் திறமை தெய்வங்களுக்கு உண்டு. நாம் உண்ண அல்லது குடிக்க பயப்படுவதை இறைவனுக்குப் படைத்தல் ஆகாது. புஷ்பங்கள் (பூக்கள்) இயன்ற அளவில் நல் கந்தத்துடன் (வாசனையுடன்) இருத்தல் வேண்டும். அவ்விதம் கிடைக்காவிடில் பன்னீர் மற்றும் சந்தனத்தை அதில் கலந்து புஷ்பத்தை உபயோகிப்பது நலமாகும். இவ்விதம் இருந்தபோதிலும் ஏதும் படைக்காதபோதும் சிறிது நீரையாவது நித்யம் (எப்போதும்) வைத்தல் வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.