அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #50

6-10-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

உறுதியாக எதுவும் நிலைப்பதில்லை என்பதை அனைவரும் அறிதல் வேண்டும் கர்ப்பவாசம் கண்ட அனைத்திற்கும் அழிவுண்டு என்பதையும் உறுதியாக மனதில் வைக்க வேண்டும். இதற்கு விதிவிலக்கு இல்லை என்றும் வந்தவர் செல்லுதல் வேண்டும் மத்தியில் ரோகங்கள் நோய்கள் என்பதெல்லாம் காணுதல் வேண்டும் என்பது இறைவனின் விதி மட்டுமல்லாது அவனின் லீலையும் ஆகும். ஏனெனில் கடினங்கள் கொடுத்து பிறவி அறுக்கும் சூட்சுமத்தை காட்டுகின்றான் என்பதை உணர வேண்டும். இவ்விதமிருக்க சென்றவர்களுக்கு நல்ல பிறவி கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுவீர்களாக.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.