அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #44

2-2-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வேள்விகள் என்பதெல்லாம் வெறும் செலவினம் தானே? அப்பொருள்கள யாவும் நல்வழிக்கு உபயோகப் படுத்தலாமே?

வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் வீணாவதில்லை. ஆண்டவனுக்கு நாம் கொடுக்கும் பொருட்கள் அனைத்தும் அவருக்கு எதுவும் தேவையில்லை என்கின்ற போதிலும் நாம் நமது திருப்திக்கென சிறிது அளிக்கின்றோம். உதாரணமாக ஒன்று கூறினால் விடை எளிதாக புரியும். விவசாயி ஒருவன் தானியங்களை விதைக்கும் காலத்தில் அது ஏன் தூவுகின்றான் அது வெறும் செலவு தானே மக்கள் பட்டினியாக இருக்க இவ்விதைகள் உதவுமே என எண்ணினால் அது தவறாகும். விதைகள் விதைத்தால் தான் உணவு உண்டாகும் என்பதை உணருதல் வேண்டும். இவ்விதமே நாம் சிறிதாக வேள்வியில் அளிக்கும் பொருட்கள் இறைவனின் அருள் பெறுவதற்கு உதவுகிறது. இத்தகைய அருளால் பல நன்மைகள் உண்டாகிறது. பெறும் நன்மைகள் உண்டாகின்றது. உதாரணமாக நல்ல மழை விளைவாக தானியங்கள் அமைதியின் விளைவாக பொருளாதார முன்னேற்றங்கள் என்பதெல்லாம் கிடைக்கக்கூடும். வேள்விக்கு உபயோகிக்கும் பொருட்கள் சிறிதே கிடைக்கும் இறையருள் பெரிதே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.