அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #22

26-1-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மாற்றான் குழந்தைக்கும் யாம் உணவு அளிக்க நமது குழந்தை தானென வளரும் என்பதற்கு பொருள் என்ன?
(ஊரார் பிள்ளை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்ன?)

பொதுவாக அன்னதானம் சிறப்பானது பொதுவாக மற்றவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு அன்னம் அளித்திட நமது குழந்தைகள் செல்வங்களோடு இருப்பார்கள் என்ற கருத்து உண்டு. இருப்பினும் இது முழுமையான அர்த்தம் ஆகாது. மாற்றான் குழந்தைக்கு உணவு நன்கென அளித்தால் என்பது கர்ப்பம் தரித்துள்ள பெண்ணுக்கு (மனைவிக்கு) நாம் நன்கென உணவு அளித்தால் நம் குழந்தை நன்றாக செழிக்கும் என்பதே பொருளாகின்றது. அதாவது நம் வீட்டில் இருக்கும் கர்பிணிக்கு (மனைவிக்கு) நன்றாக உணவு அளித்தால் நம் குழந்தை வயிற்றில் நன்றாக வளரும் என்பதே பொருளாகும். இதை மற்ற குழந்தைக்கு உணவளித்தால் நம் குழந்தை செழிக்கும் என ஒப்பிட்டு உள்ளனர். இதில் தவறில்லை என்கின்ற போதிலும் உண்மையான அர்த்தம் முன்பு கூறியது ஆகும்.

இறைவன் அனைத்தும் அறிவான் நாம் அவனை ஒன்று வேண்டும் என்று கேட்பதோ வேண்டுவதோ தவறாகுமா?

பொதுவாக பத்து குழந்தைகள் இருக்கும் இடத்தில் அழுகின்ற குழந்தையை நாம் தூக்குவோம் இல்லை என்ன என்று கேட்போம். ஓர் வீட்டில் இந்நிலை என்றால் இத்தனை குழந்தைகள் வைத்திருக்கும் இறைவனை யாம் வேண்டுதல் நன்றே தவறாகாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.