பாடல் #506

பாடல் #506: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவது பெரும்பிழை யென்றுகொள் ளீரே.

விளக்கம்:

தவம் யோகம் செய்து தீய குணங்களை போக்கி நன்மைகளைச் செய்து அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கும் அடியவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். வேஷம் போட்டுக் கொண்டு நடித்தால் தானம் கிடைக்கும் என்கிற ஆசையில் மனதில் உண்மையான அன்பில்லாமல் இருப்பவர்களுக்கு தானம் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.