அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #55

6-7-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தானங்கள் எனக் கூறினால் அன்னம், வஸ்திரம், கல்வி, மாங்கல்யம், இறுதிச் சடங்குகள் என்றெல்லாம் கூறினீர்களே இதற்கும் மேலான தானங்கள் ஏதும் இருக்கின்றதா?

பொதுவாக பூஜா பலன்களை தானமளிப்பது ஒரு சிறந்த தானமாகும். இருப்பினும் இதனை செய்வோர் குறைவாக உள்ளனர். ஏனெனில் பலன் பெறுதல் வேண்டும் என ஒரு சுயநலம் அங்கு இருக்கின்றது. இதற்கென யாம் ஒரு வழியும் இங்கு கூறுவோம் மாதம் முழுவதும் செய்யும் பூஜைகளில் ஒரு முறை ஏதாவது ஒரு நாளில் பூஜா பலன்களை நோய் நொடி கண்டோருக்கு தானமாக அளித்திட அவர்கள் உறுதியாக நலம்பெறுவார்கள். இத்தகைய ஒரு தானத்தை எவராலும் எளிதாக மனதில் இருந்தவாறே செய்ய முடியும் ஏனெனில் இதற்கு முதலீடுகள் யாவும் தேவையற்றது. இத்தகைய தானத்தை செய்ய அனைவரும் பழகிக் கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.