மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #51

19-11-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பக்திமான் என்பது யார்?

எவனொருவன் ஒரு தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அத்தெய்வத்தின் பூஜைகளில் அதிக நேரம் செயல்படுகிறானோ அவனே பக்திமான் என்று அறியப்படுவான். அதாவது வெறுமனே நானும் பக்தன் என்று கூறிக்கொண்டவர்களெல்லாம் பக்திமான்கள் ஆகிவிடுவதில்லை. எவன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட மூர்த்தியின் (இஷ்ட தெய்வத்தின்) மீது மனதை வைத்துக் கொள்கின்றானோ அவனை பக்தன் என்று உரைக்கலாம். அந்த பக்தியின் விளைவாக எப்போதும் கிரியைகளிலும் சதா பக்திமயமான எண்ணத்தோடும் இருக்கின்றவன் பக்திமான் ஆகின்றான். இதைத் தமிழில் பக்தன் என்றால் எமக்கு பக்தி உள்ளது என்று கூறுகின்றவன் (பக்தி உள்ளவன்) பக்தன் என எளிதாக கூறலாம். இப்பக்தியின் விளைவாக கிரியைகளிலும் தியானம் ஜபம் என ஆழ்ந்து இருப்பவன் பக்திமான் ஆகின்றான். தமிழில் இதற்கு ஒரு சிறப்பான வார்த்தை உண்டு. அடிகள் என்று கூறுவார்கள். எந்த நேரமும் இறைவனின் சேவையில் முழுமையாக ஈடுபடுகின்றவன் ஓர் அடிகள் ஆகின்றான். பக்தன் பக்தி உண்டு என்பது ஓர் நிலை அப்பக்தியின் விளைவாக இறைச்சேவையில் முழுமையாக ஈடுபடுவது அடிகள் என்னும் நிலை. இச்சிறு வேறுபாடே இதற்குப் பொருளாகின்றது. பக்தன் அடிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. தன் எண்ணத்தாலும், உடலாலும் ஆன்மாவாலும் எப்போதும் இறைவனை வழிபடுபவரே அடிகள் ஆகலாம். இவ்வாறு கிரியைகள் செய்து ஒரு பக்தன் அடிகளாக மாறுவதே சிறப்பான பக்திமார்க்கம். இப்போது உங்களுக்குப் புரியும்படி விளக்கியுள்ளோம் என்று நம்புகின்றோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.