மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #44

15-4-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனமே அனைத்தும் மனதினால் அனைத்தையும் வென்று விடலாம் என்றால் இப்பூஜைகள் எதற்கு?

மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்றும் ஒரு வார்த்தை உள்ளதே? மனமது செம்மையாகும் வரை இப்பூஜைகள் உறுதியாக வேண்டும். ஏனெனில் பூஜைகளில் விதிமுறைகள் உண்டு விதிமுறைகளைக் கடைபிடிக்கும்போது நம்முடைய சிரத்தையும் கவனமும் மேலோங்குகிறது. படிப்படியாக இச் சிறுசிறு சாதனைகளால் மனம் சக்தி பெறுகிறது மனம் படிப்படியாக செம்மையாகிறது. அந்நிலை அடைந்து விட்டால் பூஜைகள் தேவையில்லை. வெளியில் செய்யும் பூஜைகளை விட மானசீகமாய் பூஜைகள் செய்திடுவது பிரம்மாண்டமாய் பலனை அளிக்கும். மானசீக பூஜைகள் செய்பவர்கள் ஒரு சிலரே இருக்கின்றார்கள். இதற்கென நேரம் ஒதுக்கிவிட முடியவில்லை என்பது பொது அபிப்பிராயமாகும். இதற்கு 24 மணிநேரத்தில் வேண்டியது 20 நிமிடங்களே. இறைவனுக்கு ஒதுக்கிவிடும் நேரம் நீண்டநேரம் என எண்ணி அதனை ஒதுக்கிவிடுகிறீர்கள். இதனைத் தவிர்த்து, காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் இறைவனுக்கென மானசீகபூஜை செய்து மானசீகமாய்ப் பழகிக்கொள்ளுங்கள். இது பெருமளவிற்கு நன்மை தருவதாகும். பூஜைகள் அதன் விதிமுறைகள் உள்ளிருக்கும் கிரியைகள் கர்மங்கள் என்பதெல்லாம் மன வலிமைக்காகவே படைத்ததாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.