மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #27

2-6-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிறவிதனை அறுக்கும் திறனை அளிக்க வல்லான் ஒருவனே அவனும் எம்பிரான் ஒருவனே என்றும் அனைவருக்கும் எடுத்துரைத்தோமே. இதற்குரிய வழிகளை எம்பிரான் அருளால் திருமந்திரத்தில் உரைத்துள்ளோம். இதனைக் கைப்பற்றியோர் இஜ்ஜென்மத்திற்குள்ளாகவே பிறவி இல்லா நிலை அடையக்கூடும். சீவன் (உயிர்) முக்தர்களாக நிலவக்கூடும் என்றும் கூறுவோமே.

நாகரீக காலங்களில் இவையாவும் இயலுமோ? என ஓர் வினாவும் கேட்டோம். உறுதியாக இயலும் என்பது மட்டுமல்லாது இந்நகரில் பலப்பல ஜீவன் முக்தர்கள் நடமாடுகின்றனர் என்பதும் மட்டுமல்லாது பலர் அவதாரம் எடுத்தும் நடமாடுகின்றனர். இவையாவும் கலி முடியும் முன்னதாக வாசியை கைப்பற்றுகின்றோரையும் சிவநெறியைக் கடைபிடிக்கின்றோரையும் கலிதனின் கொடுமையிலிருந்து மீட்கவே பிரளயத்திலிருந்து காக்கவே என்றும் இங்கு எடுத்துரைத்தோமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.