மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #57

30-5-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆண்டவன் இவ்வுலகை படைத்தான் நன்றாக
ஆண்டவன் இவ்வுலகை படைத்தான் அவன் கருணையால்
ஆண்டவன் படைத்த மனிதருக்கும் கருணை என்பதும் குறையாமே
கருணைதனை அனைவரும் வளர்த்தல் வேண்டும்
கருணைதனை காட்டிடக் கருணையும் திரும்பக் கிடைக்கும்
கருணையற்ற உலகம் வெறுமையாகக் காண்பீர்கள்
கருணையே இறைவன் வாக்காகுமே
இக்கால நிலைகளைச் சிந்தித்துப் பார்த்தால் செயல்கள் யாவும் கருணையற்ற செயல்களாக இருக்கிறது
வளர்ப்பீர்கள் நன்றாக கருணைகளை ஜீவராசிகள் அனைத்தும் பெற்றிட வேண்டும் என்று
வளர்ப்பீர்கள் நன்றாக கருணைகளை சர்வதேசங்கள் பெற்றிட வேண்டும் என்று
வளர்ப்பீர்கள் நன்றாக கருணையுடன் பிரார்த்திக்கும் தன்மையை
நன்றாகத் தலை சாய்த்தும் நன்றாகக் கேட்டும் நன்றாகச் செயல்பட்டும் நன்றாகத் தலை வணங்கியும்
இறை சேவையில் ஈடுபட இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அனைத்தும் சுபிட்சம் (நல்லதாகும்).

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.