மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #46

6-7-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தியானம் வரவில்லையே ஏன்?

தியானம் செய்ய முயற்சிக்கவில்லை என்பதே காரணம். தியானம் செய்யத் தெரியவில்லை என்று கூறினால் பிறவி முதல் இறப்பு வரை ஓர் தியான நிலைதான் என்பதை இங்கு உணர வேண்டும். ஏனெனில் எதேதோ சிந்தித்து வாழ்கின்றீர்கள் அதற்கு முழு சிரத்தையைக் கொடுக்கின்றீர்கள் அச்சிரத்தையில் சிறு பங்கை இறைவனுக்குச் செலுத்த வேண்டும். எளிதான வழி என்னவென்றால் சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது ஓம் என்றும் சுவாசத்தை வெளியே விடும்போது மானசீகமாக இஷ்ட தெய்வத்தின் பெயரையும் கூறி தியானம் செய்தால் விரைவில் தியான நிலைகள் கைவரக்கூடும். இதனை மட்டும் செய்தாலே சிறப்புகள் அடைவீர்கள். இக்காலத்தில் உள்ள மகா யோகியரும் இதனையே கூறுகின்றனர். சகஜ பிராணய நிலைகள் தியான நிலை அளிப்பது மட்டுமின்றி சர்வரோக நிவாரணி என்றும் கூறுகின்றனர். இத்தகைய நல்ல விசயத்தைச் செய்ய ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள் என்று புரியவில்லை. அனைவரும் இந்த வழியைக் கடைபிடித்தால், எளிதில் ஆன்மீகப் பாதையில் நல்ல நிலை அடைய முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.