பாடல் #176

பாடல் #176: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையும் சூழகி லாரே.

விளக்கம்:

உயிர்கள் உலக ஆசையில் எவ்வளவுதான் செல்வங்கள் சேமித்து வைத்திருந்தாலும் அவர்களின் உடலை விட்டு உயிர் பிரிந்து ஓடிவிடும். உடலை விட்டு உயிர் வரும் வழியில் வெளியே காத்திருந்து அதைத் கவர்ந்து செல்லலாம் என்று நிற்கின்ற எம தூதர்களுக்குத் தடையாக இருக்கக்கூடிய ஒரே செல்வம் இறைவனைப் பற்றிய தூய்மையான சிந்தனை மட்டுமே. அவ்வாறு இறைவனைப் பற்றிய தூய சிந்தனையில் வாழும் உயிர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றை சுற்றி வருவதற்கு கூட எம தூதுவர்கள் பயப்படுவார்கள். எனவே எப்போதும் உயிர்களைக் காக்கும் இறைவனைப் பற்றியே எண்ணியிருந்து வீணான செல்வங்களின் மேல் ஆசை வைக்காமல் இருக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.