பாடல் #771

பாடல் #771 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த வுணர்வது வாமே.

விளக்கம் :

உள்ளத்தில் உண்டாகும் எண்ணத்தின் ஓசையில் இறைவனை உணர்ந்து எண்ணம் இல்லாத நிலையை கடந்தவர் ஈசனை நினைத்து அவருடனே கலந்திருப்பார் அவ்வாறு கலந்திருப்பவர் நெஞ்சினுள் ஈசன் உணர்வு வடிவாய் நிற்பன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.