பாடல் #445

பாடல் #445: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

விளக்கம்:

ஆன்மாக்களின் மேல் வைத்த மாபெரும் அன்பினால் அவை ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஏழு உலகங்களையும் படைத்து அருளினான். அந்த உலகங்களின் காலம் முடியும் போது அவற்றை அழித்து மீண்டும் புதியதாக உருவாக்கி அருளினான். உலகங்களும் உயிர்களும் தனது தொழிலை செய்வதற்காக பஞ்ச பூதங்களையும் படைத்து அருளினான். ஆன்மாக்கள் பிறவி எடுக்க உயிரையும் உடலையும் கொடுத்து அருளினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.