பாடல் #442

பாடல் #442: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமனில்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கும்
தச்சும் அவனேதான் சமைக்கவல் லானே.

விளக்கம்:

தலை உச்சியிலுள்ள சகஸ்ரரதளத்தில் ஒளிவீசித் திகழும் நாத வடிவான இறைவனை அன்பு செய்து அவனோடு சேர்ந்து பேரின்பத்தை உணர்ந்தவர்களுக்கு மரணம் என்பது இல்லாததால் எமன் கிடையாது. விரிந்து பரந்திருக்கின்ற இந்த உலகத்தில் கண்களால் காணக்கூடிய சூரியன் சந்திரன் நெருப்பில் இருந்து வரும் மூன்றுவித ஒளிகளைக் கொடுத்து அருளிய அவனேதான் கண்களால் காண முடியாத ஒளியாக சகஸ்ரரதளத்தில் கலந்து இருக்கின்றான். அந்த ஒளியில் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு பேரின்பத்தை வழங்கி மரணமில்லாத பெருவாழ்வை அருளக்கூடியவனாக இறைவன் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.