பாடல் #58

பாடல் #58: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றன்பொருள் ஏத்துவன் யானே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தி உயிர்கள் உய்யும் பொருட்டு அருளிய சிவாகமங்களை எண்ணினால் அது இருபத்து எட்டு கோடி நூறாயிரம் இவற்றையே விண்ணில் இருக்கும் தேவர்களும் சிவபெருமானின் சிறப்புக்களாகக் கூறினார்கள். அவற்றையே நானும் சிந்தனை செய்து நின்று அவற்றின் பொருளைப் புகழ்ந்து பாடிப் பரப்புகின்றேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.