பாடல் #1305

பாடல் #1305: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆரு முரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரு மறியாத வானந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலு மதியதி
யூனு முயிரு முணர்வது வாமே.

விளக்கம்:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரமாகிய ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்துக்களை யாரும் அசபையாக உச்சரிக்கலாம். அதை முறைப்படி உச்சரித்து சாதகம் செய்பவர்களுக்கு யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத பேரின்ப உருவமாக இருக்கின்ற சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்ட சாதகர்களுக்கு உலகமாகவும் ஆகாயமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் பாடல் #1302 இல் உள்ளபடி பொன் போன்ற உடலாகவும் உயிராகவும் உணர்வாகவும் அந்த சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப உருவமே இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.