பாடல் #491

பாடல் #491: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பரத்திற் பதிந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டில்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்தும் பிறக்கும் திருவரு ளாலே.

விளக்கம்:

இறைவனின் பரமான்மாவோடு கலந்திருந்த நல்ல ஆன்மா உலகில் உயிராகப் பிறந்து தனது ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டால் கடல் தண்ணீர் சூரியனின் வெப்பத்தினால் திரண்டு உப்புக் கட்டிகளாக மாறுவதுபோல இறைவனது திருவருளால் பேரான்மாவோடு கலந்திருக்கும் ஆன்மா உடல் பெற்று ஒரு உயிராகப் பிறவி எடுக்கின்றது.