பாடல் #580

பாடல் #580: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்கு மேலும் பிறப்பு உறுப்பிலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்குக் கீழும் உள்ள இடத்தில் வட்ட வடிவமாக இருக்கும் குண்டலினி சக்தியின் மையப்புள்ளி உள்ளது. அந்த குண்டலினி சக்தியிலிருந்து வெளிப்படும் செம்மையான ஒளி தொப்புள் குழியிலிருந்து நான்கு அங்குலம் அளவிற்குக் கீழே இருக்கும் இடம் வரை பரவியுள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.