பாடல் #670

பாடல் #670: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

விளக்கம்:

அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்பவர்களுக்கு எட்டு சித்திகள் கிடைப்பது மட்டுமன்றி ஆத்ம அறிவு முதல் அண்டசராசரங்கள் வரை அறிந்துகொள்ள முடியும். நமக்குள் இருக்கும் இறைவனது அருளால் அந்த இறைவனின் சக்தியானது நமக்குள்ளே எட்டுவித சித்திகளையும் உணர்த்திவிடும்.

கருத்து: அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்தால் இறைவனின் அருளால் எட்டுவித சித்திகளையும் பெற்று பேரறிவையும் அறியலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.