பாடல் #666

பாடல் #666: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்
அடங்கி அடங்கிடும் வாயு வதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

விளக்கம்:

பாடல் #665 ல் உள்ளபடி ஒடுங்கிய மனதில் இருக்கும் இறைவனை உணர்ந்து லயித்திருந்தால் மூச்சுக்காற்றும் அதனோடு அடங்கியிருக்கும். அவ்வாறு அனைத்தும் அடங்கியிருக்கும் உடம்போடு உயிர் நிலைபெற்று இருக்கும். அவ்வாறு நிலைபெற்ற உயிரில் நடனத்திற்குத் தலைவனான இறைவனே நாடி வந்து இருப்பான்.

கருத்து: குண்டலினி சக்தியும் மூச்சுக்காற்றும் மனமும் ஒருமுகப்பட்டு இருக்கும் உயிரில் இறைவன் நாடி வந்து இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.