பாடல் #664

பாடல் #664: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தினில் ஒடுங்கே.

விளக்கம்:

உடலில் நூற்று ஐந்தாக பிரிந்து இருக்கின்ற சக்தி (பாடல் #664 இல் உள்ளபடி) பரிபூரணமாய் ஒருநிலைப்பட்டு மறைந்தவாறு உடலுக்குள் எழுந்து அங்கே மறைந்து உடலெங்கும் பரவி உடலிலுள்ள பஞ்ச பூதங்களுடன் ஒருமுகப்பட்டு உடலிலுள்ள பத்துவித வாயுக்களோடு ஒடுங்கி இருக்கும்.

கருத்து: உடலிலுள்ள பஞ்ச பூதங்களோடும் பத்துவித வாயுக்களோடும் பூரணசக்தி கலந்து இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.