பாடல் #663

பாடல் #663: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாயினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

விளக்கம்:

ஒன்பது சக்திளும் இணைந்த பராசக்தியானது (பாடல் #663 இல் உள்ளபடி) உடலில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களைச் செய்யும் ஐந்து மூர்த்திகளையும் உணர்கின்ற ஐந்து இடங்களுக்கும் இருபத்து ஒருவராக பிரிந்து மொத்தம் நூற்று ஐவராக கலந்து இருக்கின்றார்கள்.

கருத்து: உடலில் ஐந்தொழில்களையும் செய்கின்ற ஐந்து இடங்களிலும் சக்தியாக பூரணசக்தி கலந்து இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.