பாடல் #662

பாடல் #662: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே.

விளக்கம்:

உடலிலுள்ள ஒன்பதுவித சக்திகளும் சகஸ்ரதளத் தாமரையின் தண்டாகிய சுழுமுனை வழியே குண்டலினி சக்தியோடு இணைந்து சென்று சகஸ்ரதளத்தை அடைந்து அங்கு இருக்கும் பராசக்தியோடு சேர்ந்து பூரண சக்தியாகி (முழுமையான சக்தியாகி) நிரந்தரமாக இருக்கும்.

ஒன்பது சக்திகள்:

  1. வாமை = ஊன்றல்
  2. ஜேஷ்டை = சுழித்தல்
  3. ரெளத்திரி = விசிரிம்பித்தல்
  4. காளி = மடித்து மேலேறல்
  5. கலவிகரணி = அங்கிருந்து கீழ்வரல்
  6. பலவிகரணை = மேல் புடை பெயர்த்தல்
  7. பலப்பிரமதனி = கீழ்த் தாழல்
  8. சர்வபூததமனி = கீழ் ஊன்றி நிற்றல்
  9. மனோன்மணி = வரி வடிவாதல்

கருத்து: குண்டலினியை சகஸ்ரதளத்தோடு சேர்ப்பவர்களுக்கு உடலிலுள்ள ஒன்பது சக்திகளும் பராசக்தியோடு இணைந்து நிரந்தரமாக இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.