பாடல் #523

பாடல் #523: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துட் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.

விளக்கம்:

குண்டலினிசக்தி முதலாவது சக்கரமான மூலாதாரத்திலிருந்து சுழுமுனை (முதுகெலும்பு) வழியாக மேலே ஏறிச்சென்று சிரசிலுள்ள (தலை உச்சி) சகஸ்ரர தளத்தில் உள்ள செஞ்சிவப்பு நிற ஒளியுடன் கலந்து சிவமாகி நிற்கும். அவ்வாறு மேலெழுந்து நின்றவுடன் முன் வினைகள் அனைத்தையும் அழித்து உலகப்பற்றை அறுத்து உலகமும் உடலும் ஒன்றே என்ற நிலையை அடைவித்து ஆட்கொள்வது சிவபெருமானின் அதோமுகம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.