பாடல் #522

பாடல் #522: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைத்திடில் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

விளக்கம்:

செழுமையான கடல்களால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகத்தைப் படைத்த இறைவனுக்கு மனிதர்களில் யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி இல்லாமல் பொய்யாகப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்பது நன்றாகத் தெரியும். யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி கொண்டு போற்றி வணங்குகின்றார்களோ அவர்களை வாணுலகத்து தேவர்களும் வந்து வணங்கச்செய்வான் அதோமுகம் கொண்ட கருத்த தொண்டையை உடைய இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.