பாடல் #519

பாடல் #519: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

விளக்கம்:

தான் ஒரு அந்தணன் என்று பெயரை மட்டும் கூறிக்கொண்டு சிவபெருமானிடம் அன்பும் சிவனைப் பற்றிய அறிவும் ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக்கோயிலில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்தால் அக்கோயில் உள்ள நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும் வெளிநாட்டுப் போர்களும் நடப்பதோடு அந்நாட்டில் கொடிய நோய்களும் விவசாய நிலங்களில் ஒன்றும் விளையாமல் பஞ்சமும் உண்டாகும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

குறிப்பு: திருமந்திரம் பாடல் எண் 224 முதல் 237 வரை அந்தணர் ஒழுக்கம் என்ற தலைப்பில் 14 பாடல்களில் அந்தணர் என்பவர் யார் அவர் எப்படி இருக்க வேண்டும் என்று திருமந்திர பாடல்களில் உள்ளது. இந்த 14 பாடல்களையும் நமது வலைதளத்தில் படித்து அறிந்து கொள்ளலாம். வலைப்பகுதியில் தேடுவதற்கு சிரமமாக இருந்தால் தேடல் பகுதியில் எண்களை டைப் செய்து என்டர் செய்தால் சிரமம் இல்லாமல் பாடல்களை பாடிக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.