பாடல் #517

பாடல் #517: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

விளக்கம்:

சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடுகள் சிறப்பு நாள் வழிபாடுகள் (பிரதோஷம் சிவராத்திரி) ஆகியவற்றை முறையாகச் செய்யாமல் விட்டாலோ அல்லது ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி அக்கோவில்களில் ஏதேனும் தவறாக செய்தால் அந்த நாட்டில் தீர்க்க முடியாத நோய்கள் பரவும். மழை பெய்யாது. அந்த நாட்டை ஆளும் அரசன் பேரரசனாக இருந்தாலும் தனது எதிரிகளைப் போரில் வெல்லும் வலிமை குறைந்து போய்த் தன் நாட்டையே இழப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.