பாடல் #496

பாடல் #496: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாடுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.

விளக்கம்:

உயிர்களின் வகைகளில் மூன்றாவதாக இருப்பவர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் கொண்ட அஞ்ஞானர். இவர்கள் முத்தர் சாதகர் சகலர் ஆகிய மூன்று விதமாக இருக்கிறார்கள்.

முக்தர்:

முன் ஜென்ம நல்வினைப் பயனால் இறைவனே குருவாக மனித உருவில் வந்து கொடுத்த ஞானத்தைப் பெற்று மும்மலம் கொண்ட தங்களின் ஆன்மாவை சிவத்தோடு இரண்டறக் கலந்து முக்தி பெற்ற முத்தர் ஆவார்கள்.

சாதகர்:

முன் ஜென்ம வினைப் பயனால் இறையருளைப் பெற்று தியானம் தவம் யோகப்பயிற்சிகள் பூஜைகள் செய்து கொண்ணிருப்பார்கள். இவர்கள் சாதகர் ஆவார்கள். இவர்கள் தாம் மேற்கொண்ட சாதகங்களின் பயனால் மும்மலங்களால் உருவாகும் துன்பங்களிலிருந்து பாதிக்காமல் இருப்பார்கள்.

சகலர்:

இவர்கள் மாயையால் உலக வாழ்க்கையிலேயே அமுங்கிக் கிடந்து மும்மலங்களின் வலிமை அதிகமாகப் பெற்ற சகலர் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.