பாடல் #417

பாடல் #417: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றதும் அவனே வனையவல் லானே.

விளக்கம்:

உயிர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் உயிர்களைப் பல்வேறு உலகங்களிலும் உருவாக்குபவன் இறைவனே. அவனே உயிர்களின் வினைப் பயனைப் பெற்று அதன் காரணமாக பிறவியை உருவாக்குபவன். ஒரு குயவன் தனது அச்சுச் சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுற்றி அந்தக் களிமண்ணைப் பிடித்து தாழியும், குடமும், சிறு பாண்டங்களும் மற்றும் பலவிதமான மண் பாத்திரங்களும் செய்வதைப் போல இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான உடல்களை வடித்து அருளும் வல்லமை உள்ளவன் ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.