பாடல் #414

பாடல் #414: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடலுயிர்
கூடு மரபிற் குணஞ்செய்து மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நானுமறிந் தேனே.

விளக்கம்:

உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் பிறவி எடுத்திருக்கும் பல ஆன்மாக்கள் கூடி நிற்கின்ற உடல்களின் உயிராகவும் அப்படிக் கூடுகின்ற காரணமான வினைப் பயனாகவும் இருக்கின்றவன் மாபெரும் குருவான இறைவன். அவனே உயிர்களின் உள்ளத்துக்குள் மன சாட்சியாய் நின்று அவற்றின் வினைப் பயனுக்கு ஏற்ப அவை அனுபவிக்கும் இன்பம் துன்பமாகவும் விருப்பு வெறுப்பாகவும் இருக்கும் முறையையும் அவனது கருணையினால் யான் அறிந்தேன்.

உட்கருத்து: பாடல் #406 இந்த பாடல் போலவே இருந்தாலும் அதில் பிறப்பைக் கூறிய திருமூலர் இதில் காப்பதைக் கூறியிருக்கின்றார். இதை ஒரு வார்த்தையையும் ஒரு எழுத்தையும் மாற்றி உணர்த்தி நிற்கின்றார் திருமூலர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.