பாடல் #392

பாடல் #392: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.

விளக்கம்:

எல்லாப்பயன்களையும் எளிதில் அளிக்கக் கூடியதும் பேரின்பத்தை வழங்கக் கூடியதும் நம்பிக்கைக்கு உரியதுமான ஒரு மாணிக்ககல் இருக்கிறது. அந்தக் மாணிக்ககல்லே உயிர்களைப் படைக்கும் பிரம்மனுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகிறது. அந்த மாணிக்ககல்லாக இறைவன் இருக்கும் காரணத்தை யாம் அறிந்து தெளிந்து கொண்டோம்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.