பாடல் #390

பாடல் #390: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்குஆர் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குஉயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

விளக்கம்:

ஓங்கிய பாற்கடலின் மேல் இருக்கும் திருமாலும் அழகிய கயிலை மலையின் மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும் மலர்ந்து விரிந்து இருக்கின்ற தாமரை மலரின் மேல் இருக்கும் பிரம்மனும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப் பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்து இருக்கின்றார்கள்.

உட்கருத்து: பிரம்மன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்யும் உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.