பாடல் #386

பாடல் #386: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

விளக்கம்:

உலகங்களைப் படைப்பது ஒலியாகிய சிவமும் ஒளியாகிய சக்தியுமாகும். அந்த உலகங்களில் பல தொழில்களைப் புரிவதற்காக இவர்களின் சக்தியிலிருந்து தோன்றிய பிள்ளைகள் ஐந்து பேர். அவர்கள் உயிர்களைப் படைக்கும் பிரம்மன் உயிர்களைக் காக்கும் திருமால் உயிர்களை அழிக்கும் உருத்திரன் உயிர்களை மாயையால் மறைக்கும் மகேசுவரன் உயிர்களுக்கு அருளும் சதாசிவன் ஆகிய ஐந்து பேராவார்கள். அனைத்தையும் படைப்பதற்குக் காரணமான சதாசிவமூர்த்தியே ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருந்து உலகங்கள் அனைத்துமாகவும் அதிலிருக்கும் உயிர்கள் அனைத்துமாகவும் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.