பாடல் #383

பாடல் #383: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி ( அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் இருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

விளக்கம்:

ஒலியாய் இருக்கும் சிவத்தோடு எப்போதும் பிரியாமல் ஒளியாய் இருக்கும் சக்தி சேர்ந்தே இருக்கிறது. நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்தில் இருந்து வரும் ஒளியும் வேறு வேறாய் அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும். அது போல் சிவமும் சக்தியும் ஒன்றேவாகும். இப்படி இருக்கின்ற சிவசக்தியை உருவாக்கிய பரம்பொருளின் வலிமைகளை விளக்கிச் சொல்லினால் அது பலகாத தூரத்திற்கும் நீண்டு போய்க்கொண்டே இருக்குமே தவிர முடியாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.