பாடல் #374

பாடல் #374: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னம்
சேணாய்வா னோங்கி திருவுரு வாய்அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்
தாண்முழுது அண்டமு மாகிநின் றானே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தியாகிய இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களின் உடம்பாகவும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளிருக்கும் நெருப்பாகவும் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி நின்ற தீப்பிழம்பு உருவமாகவும் அண்டங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் தூணாகவும் சூரியனாகவும் குளிர்ந்த சந்திரனாகவும் பரவி இருக்கின்ற அண்டங்கள் மொத்தமும் தாமாகவும் நிற்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.