பாடல் #349

பாடல் #349: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழிப் பிரமருக்கும் வாள்கொடுத் தானே.

விளக்கம்:

கடல் போல் வலிமை கொண்ட பிரமன் திருமால் இருவரும் நெடுங்காலம் ஒளி வடிவாக இருக்கின்ற ஆதி இறைவனை வழிபட திருமாலுக்கு சக்ராயுதமும் பிரம்மனுக்கு வாளும் கொடுத்து அருளினான்.

உட்கருத்து: பாடல் #347 ல் உள்ளபடி அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர முதல் சக்கரம் மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் அசையும் சக்தியான குண்டலினி கடல் போல் வலிமை கொண்ட 2வது சக்கரமாகிய பிரம்மன் வீற்றீருக்கும் சுவாதிட்டானம், 3வது சக்கரமாகிய திருமால் வீற்றிருக்கும் மணிப்பூரகத்தை உணர்ந்தும் அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர்ந்து தனக்குள் லிங்க உருவத்தை உணர்ந்தும் தத்துவத்தை உணர்ந்தும் நெடுங்காலம் ஒளி வடிவாய் இருக்கும் ஆதி இறைவனை வழிபட்டால் திருமால் செய்யும் காக்கும் வேலையும் பிரம்மன் செய்யும் படைக்கும் வேலையையும் இறைவன் கொடுத்து அருளுவான்.

இதனை திருமந்திர பாடல் #302, பாடல் #321 ன் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பல புராண வரலாறுகளில் பல மகான்கள் சித்தர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றில் இறந்தவர்களை மீண்டும் மீட்டு படைக்கும் பிரம்மனின் தொழிலை செய்துள்ளார்கள். கர்மவினைகளின் படி இறக்கவேண்டியவர்களை காத்து காக்கும் திருமாலின் தொழிலை செய்துள்ளார்கள்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.