பாடல் #348

பாடல் #348: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

விளக்கம்:

எல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிக்கொண்டு சோர்ந்து போக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மை பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்ல. பாடல் #347 ல் உள்ளபடி தனக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடன் பெருங்கருணையோடு நின்று அவர்களின் பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.