பாடல் #347

பாடல் #347: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமாத வஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.

விளக்கம்:

ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று சக்தி உறுதி எடுத்துக் கொண்டு இமய மலையின் அரசனாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்து பல காலம் உறுதியுடன் மாபெரும் தவம் செய்து தேவர்களும் அறியாத வழிபாட்டு முறைகளை தேவர்களும் அறிய முறையாக பூஜை செய்து இறைவனை அடைந்தாள்.

உட்கருத்து: ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் உயிர்கள் தமது உறுதியிலிருந்து சற்றும் விலகாமல் தியானமும் தவமும் செய்து அசையும் சக்தியாகிய குண்டலினி சக்தியை மேலேற்றி தனது சிரசின் இடப்பக்கம் இருக்கும் அசையா சக்தியாகிய சிற்சக்தியுடன் சேர்த்தால் தேவர்களும் அறியாத இறைவனின் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் தனக்குள்ளேயே உணர்ந்து இறைவனின் திருவடிகளைச் சென்று அடையலாம்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.