பாடல் #748

பாடல் #748: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறைபறை யாது பணிந்து முடியே.

விளக்கம்:

பாடல் #743 ல் இருந்து #747 வரை உள்ள அகயோகப் பயிற்சி முறைகளை முறையாக குருவின் மூலம் கற்று பகுத்து அறிந்துகொண்டு முயற்சிக்க வேண்டும். குருவருள் இல்லாமல் முறையில்லாமல் செய்யும் யோகப் பயிற்சியால் நீண்ட காலம் நிலைத்து நிற்கவும் முடியாமல் இறையருளும் அவர்களுக்கு கிடைக்காது. குருவின் மூலம் முறையாக கற்றுக்கொண்டதும் அதை வேறு எவருக்கும் சொல்லாமல் பணிவோடு முயற்சி செய்து முடியுங்கள். யாருக்கும் சொல்லாமல் பணிவோடு செய்யுங்கள் என்று அருளியதன் காரணம் இறையருள் கிடைக்காது இதுவே காரணம் அன்றி வேறொன்றும் இல்லை.

கருத்து: குருவின் மூலம் முறையாகக் கற்று அதன்படி அகயோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.