பாடல் #751

பாடல் #751: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடல் மண்டல மூன்றுக்கும்
பூவினில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

விளக்கம்:

பாடல் #750 இல் உள்ளபடி அகயோகத்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து ஓவியம் போல அசையாமல் நிலைபெறும் உணர்வுகளை அறிந்து கொள்ளுங்கள். ஒழுக்கத்திலிருந்து தவறி பாவத்திலேயே வாழுகின்ற உயிர்கள் இந்த யோகத்தின் பயன்களை அறிந்து கொள்வதில்லை. தீவினையால் பிறந்த இந்த உடலுக்கு இருக்கும் அனைத்து வினைகளையும் நீக்கி பிறவிச் சுழற்சியை அகயோகப்பயிற்சியால் அறுத்து அடைய வேண்டிய அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்களுக்கு (பாடல் #746 ல் உள்ளபடி) செல்லும் வழியாக சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவிற்கு காம்பு போல புண்ணிய பாதையான சுழுமுனை நாடி இருக்கின்றது.

கருத்து: தீவினையால் பிறந்த உடலுக்கு புண்ணியத்தை பெற்று பிறவி இல்லா நிலையடைய ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரும் அதன் காம்பு போல நீண்ட சுழுமுனை நாடியும் இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.