பாடல் #657

பாடல் #657: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாடியின் ஓசை நயனம் இருதயந்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து தலை உச்சிக்கு செல்லும் குண்டலினி சக்தியின் ஜோதியை அகக் கண்ணால் கண்டு அந்த ஜோதியின் ஒளிர்விடும் ஓசையை இதயத்துடிப்பால் உணர்ந்து இருப்பவர்களை தேவர்களுள் முதல்வர்களான உருத்ரன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரும் இடைவிடாது உள்ளுக்குள் உணர்ந்திருப்பார்கள்.

கருத்து: குண்டலியின் ஜோதியையும் அதன் ஓசையும் தமக்குள் உணர்ந்தவர்களை முப்பெரும் தேவர்களும் உணர்ந்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.