பாடல் #624

பாடல் #624: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

விளக்கம்:

கட்டுப்பாடின்றி உடம்பின் மேலும் கீழும் செல்லும் பிராணவாயுவை வீட்டைப் பூட்டி வீட்டை தன் கட்டுப்பாட்டில் வைப்பது போல உடம்பினுள் பிராணவாயுவைக் கட்டுப்படுத்தி வைத்து ஆசைப்பட்டு வெளியே அலையும் மனதை ஒருமுகப்படுத்தி வெளியில் பார்க்கும் பார்வையை உள் நோக்கி செலுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தால் மாம்பழமும் இனிப்பும் போன்று இறைவனுடன் ஒன்றி சமாதியில் இருக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.