பாடல் #610

பாடல் #610: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

விளக்கம்:

தியானத்தினால் ஆறு சக்கரத்திலும் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியிலிருந்து வெளிவரும் ஐந்து வகை அக்கினிகளான மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்கினி, கதிராவன் அக்கினி, திங்கள் அக்கினி ஆகியவை பிரகாசிக்கும் போது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கும். அதன்பின் ஐந்து புலன்களாகிய சுவைத்தல், பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுதல் ஆகிய உணர்வுகள் நீங்கப் பெற்று சிவபெருமானை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.