பாடல் #607

பாடல் #607: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணையும் அண்டரண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

விளக்கம்:

கடலின் அலையோசை மேகத்தின் இடியோசை யானை பிளிறும் ஓசை ஆகிய வன்மையான ஓசைகளில் ஆரம்பித்து வீணையின் ஓசை அண்டமெல்லாம் கலந்து இருக்கும் ஓம் எனும் ஓசை புல்லாங்குழலின் மெல்லிய ஓசை சிறிய துளையுடைய சங்கொலி ஆகிய மென்மையான ஓசைகளில் முடியும் இந்த ஓசைகளை மன உறுதியோடு தியானம் செய்யும் யோகியர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.