பாடல் #581

பாடல் #581: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.

விளக்கம்:

மூக்கிலிருந்து பன்னிரண்டு அங்குலம் அளவிற்குக் கீழே உள்ள இடத்தில் வைத்து (நான்காவது சக்கரமான அநாகதம் இருக்கும் இடமான நெஞ்சுக் குழி) நிர்மூலமாக இறைவனை தியானிக்கும் சக்தியுள்ளவர்களுக்கு எட்டு வகையான சித்திகளையும் கொடுக்கும் மாபெரும் யோகங்களும் வந்து சேரும். அப்படி சேர்ந்தபின் உடம்பிற்கு எப்போதும் அழிவு என்பது இல்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.