பாடல் #579

பாடல் #579: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)

நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலத்தில்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடியிருந் தானே.

விளக்கம்:

தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தூரத்தில் உள்ள மூலாதாரத்தில் இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. அந்த ஓம் என்னும் மந்திரத்தை உணர்ந்துவிட்டால் அந்த மந்திர ஒலியாய் இருக்கும் சிவபெருமானை நமக்குள் உணரலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.